அட பாவி மனுஷா.. இப்டி பண்ணிட்டியே...!! 10-ம் வகுப்பு மாணவியை குடும்ப நண்பர் செய்த கொடூர காரியம்.!

அட பாவி மனுஷா.. இப்டி பண்ணிட்டியே...!! 10-ம் வகுப்பு மாணவியை குடும்ப நண்பர் செய்த கொடூர காரியம்.!



young man killed young girl

கோவை மாவட்டம் சரவணம்பட்டி அருகே உள்ள மாருதி நகர் பகுதியின் முள்புதரில் சமீபத்தில் சாக்கு மூட்டையில் கை, கால்கள் கட்டப்பட்டு, கம்பளியால் சுற்றப்பட்டு அழுகிய நிலையில் சிறுமியின் சடலம் கிடந்துள்ளது. இதனையடுத்து அந்த சிறுமி யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் சமீபத்தில் சம்பவம் நடந்த பகுதியின் அருகே வசிக்கும் கலைவாணி என்பவர் 10-ம் வகுப்பு படித்து வரும் தனது மகள் கார்த்திகாவை டிசம்பர் 11-ந் தேதி முதல் காணவில்லை என்று புகார் கொடுத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கலைவாணியை போலீசார் சம்பவ இடத்துக்கு வரவழைத்து பிணமாக கிடந்த சிறுமியின் சடலத்தை காட்டியுள்ளனர்.

இறந்து கிடப்பது தனது மகள் கார்த்திகா தான் என்று அறிந்த கலைவாணி கதறி அழுதுள்ளார். இதனையடுத்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தநிலையில், சிறுமியின் கொலை வழக்கில் இன்று ஒருவரை கைது செய்துள்ளனர். 

கைதுசெய்யப்பட்ட நபர் கலைவாணியின் குடும்ப நண்பர் முத்துக்குமார்  என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. முத்துக்குமார் , நகைக்காக சிறுமியை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அங்கு மாணவிக்கும் முத்துக்குமாருக்கும்  இடையே தகராறு ஏற்பட்டதில் முத்துக்குமார்  மாணவியை கொலை செய்தது தெரியவந்தது.