மேம்பாலத்திலிருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்த இளைஞர்.! குறுக்கே வந்த கார்.! அதிர்ச்சி சம்பவம்.!

மேம்பாலத்திலிருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்த இளைஞர்.! குறுக்கே வந்த கார்.! அதிர்ச்சி சம்பவம்.!



young boy suicide attempt in chennai

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்ற 34 வயது இளைஞர், சென்னை அமைந்தகரையில் உள்ள பிரியாணி கடையில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் செல்வதற்காக விடுமுறை எடுத்துவிட்டு பிரியாணி கடையில் இருந்து சென்றுள்ளார் மாரிமுத்து. 

ஆனால் அவர் ஊருக்கு செல்லாமல் கடந்த 2 நாட்களாக தாம்பரம் சுற்று வட்டாரப்பகுதியில் அவர் சுற்றித்திரிந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்று சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி. மேம்பாலத்தில் இருந்து மாரிமுத்து திடீரென சாலையில் குதித்தார். 

suicide

அப்போது அந்த வழியாக சென்ற இன்னோவா கார் மீது விழுந்த அவர், அங்கிருந்து உருண்டு சாலையில் விழுந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பின்னால் வந்த வாகனங்கள் அவர் மீது மோதாமல் இருக்க அந்த வாகனங்களை கை காட்டி நிறுத்தினர். இதனையடுத்து  பலத்த காயம் அடைந்த மாரிமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மாரிமுத்து, குடும்ப தகராறு காரணமாக மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. அவர் தற்கொலைக்கு முயன்ற காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.