பள்ளி மாணவியை மயக்கி பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்.! அதிர்ச்சியடைந்த பெற்றோர்.!
பள்ளி மாணவியை மயக்கி பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்.! அதிர்ச்சியடைந்த பெற்றோர்.!
சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் என்ற இளைஞர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு, டிக்-டாக் செயலி மூலம் 12 ஆம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதாக கூறப்படுகிறது.
12 ஆம் வகுப்பு மாணவியின் காதல் விவகாரம் மனைவியின் பெற்றோர்க்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து பெற்றோர், மாணவியை கண்டித்துள்ளனர். இந்தநிலையில் கடந்த 16-ஆம் தேதி தோழியை பார்க்க செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்ற மாணவி, நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன மாணவியின் பெற்றோர் சிறுமையை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதுதொடரபாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் மாணவி, அடையாறில் விக்னேஷ் வீட்டில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து விக்னேஷ் வீட்டிற்கு சென்ற போலீசார் மாணவியை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். சிறுமியை ஏமாற்றி பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் விக்னேஷை போலீசார் கைது செய்தனர்.