சிறுவன் சிறுமிக்கு ஏற்பட்ட காதல்! இடையூறு செய்த பெண்! காதல் ஜோடி சேர்ந்து செய்த கொடூரம்!

சிறுவன் சிறுமிக்கு ஏற்பட்ட காதல்! இடையூறு செய்த பெண்! காதல் ஜோடி சேர்ந்து செய்த கொடூரம்!



young boy and girl killed women

கொடைக்கானல் அருகேயுள்ள பண்ணைக்காடு என்னும் பகுதியை சேர்ந்த கேசவன் என்பவரது மனைவி சுந்தரி. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 வருடங்களாக தனியாக வசிக்கிறார் சுந்தரி. இவர்களுக்கு 11 வயதில் மகள் இருக்கிறார். மகளை கேசவன் தன்னுடன் வைத்து வளர்த்து வருகிறார்.

இந்தநிலையில் சில தினங்களுக்கு முன் உறவுக்கார பெண்ணுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்மான முறையில் இறந்து கிடந்தார் சுந்தரி. சந்தேகமடைந்த சுந்தரியின் தாய் விஜயா போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

இதனையடுத்து கொலை செய்யப்பட்ட பெண்ணுடன் இருந்த பண்ணைக்காட்டை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். அதனால் சந்தேகமடைந்த போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

Murder

விசாரணையில் அந்த சிறுமியும், திண்டுக்கல்லை சேர்ந்த சிறுமியின் காதலனும் சேர்ந்து துப்பாட்டாவால் சுந்தரியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த காதல் ஜோடி சுந்தரி வீட்டில் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இதுகுறித்து தெரியவந்த சுந்தரி இருவரையும் கண்டித்ததுடன் வீட்டில் சொல்லப்போவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இருவரும் சுந்தரியை கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த சிறுமியை மதுரை சிறுவர் சீர்திருத்த பள்ளியில்  போலீசார் சேர்த்தனர். தலைமறைவாக உள்ள சிறுமியின் காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.