பள்ளி மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் கொடுமை செய்த கல்லூரி மாணவன்.! மயங்கி விழுந்த பெண் கொடுத்த அதிர்ச்சி தகவல்.!

பள்ளி மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் கொடுமை செய்த கல்லூரி மாணவன்.! மயங்கி விழுந்த பெண் கொடுத்த அதிர்ச்சி தகவல்.!



young-boy-abused-shool-girl

வில்லியனுார் அருகே உள்ள ஜி.என்.பாளையம் எழில் நகரை சேர்ந்தவர் வருண். இவர் அப்பகுதியில் உள்ள கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி. இறுதியாண்டு படித்து வருகிறார். இவருக்கும், 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. வருண் அந்த மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி தனது வீட்டுக்கு அழைத்து சென்று  பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அப்பெண்ணை வருண் ஒரு ஜவுளிக்கடைக்கு பின்புறம் விட்டு விட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அந்த மாணவி மயங்கி விழுந்துள்ளார். இதனைப்பார்த்த பொதுமக்கள் அந்த மாணவியை மீட்டனர். பின்னர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த மாணவியிடம் விசாரணை செய்தபோது அவர் நடந்த விவரத்தை கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் குழந்தைகள் நலக்குழுவிடம் தெரிவித்தனர். பின்னார் குழந்தைகள் நலக்குழு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து வருணை கைது செய்தனர்.