இரவு நேரத்தில் ஓடோடி சென்று அஜித்கு ஆறுதல் கூறிய முதல்வர் விஜய்! நேரில் சென்று அஞ்சலி செலுத்திய காட்சி...!!!
நடிகர் அஜித்தின் தாயார் மோகினி இன்று வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு 84 வயது. தூக்கத்திலேயே உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி வெளியாகியதைத் தொடர்ந்து திரையுலகினர் பலரும் அஜித்தின் இல்லத்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தூக்கத்திலேயே உயிர் பிரிந்த மோகினி
அஜித்தின் தாயார் மோகினி கடந்த சில காலமாக வயது மூப்பு காரணமான உடல்நலக் குறைகளால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று அதிகாலை தூக்கத்திலேயே அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது மறைவு குடும்பத்தினரையும், அஜித்தின் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அஞ்சலி செலுத்தும் திரையுலகினர்
மோகினியின் மறைவு குறித்து தகவல் அறிந்ததும் சினிமா துறையைச் சேர்ந்த பலரும் அஜித்தின் இல்லத்துக்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அஜித் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, தங்களது இரங்கலையும் பதிவு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மரண செய்தியை கேட்டதும் நள்ளிரவில் முதல் ஆளாய் ஓடோடி போன நடிகர் தனுஷ்! மகள் கதறி அழுத பரிதாப வீடியோ காட்சி.....
நேரில் வந்து ஆறுதல் கூறிய விஜய்
இதற்கிடையில், விஜய் இரவு நேரத்தில் அஜித்தின் இல்லத்துக்கு சென்று மோகினிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர் தாயை இழந்த துயரத்தில் இருந்த அஜித்தை சந்தித்து ஆறுதல் கூறினார். திரையுலகில் இருவரும் போட்டியாளர்களாக பார்க்கப்பட்டாலும், தனிப்பட்ட முறையில் நல்ல நட்புறவை பேணி வருவதாக அவர்களுக்கு நெருக்கமானவர்கள் நீண்ட காலமாக கூறி வருகின்றனர். அந்த நட்பின் வெளிப்பாடாகவே விஜய் நேரில் வந்து இரங்கல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.
🔔 तमिलनाडु के मुख्यमंत्री C. Joseph Vijay अभिनेता Ajith Kumar की माताजी को श्रद्धांजलि अर्पित करने के लिए उनके आवास पर पहुंचे। उन्होंने शोक संतप्त परिवार से मुलाकात कर अपनी संवेदनाएं व्यक्त कीं। 🕯️#CMVijay #AjithKumar #TamilNadu #Condolences #BreakingNews #CMJosephVijay… pic.twitter.com/9ARNyS5q9v
— Sunil Yadav PDA (@SudheerYad40842) May 30, 2026
இதையும் படிங்க: BREAKING: தமிழக முன்னாள் ஆளுநர் கே. ரோசய்யாவின் மனைவி சிவலட்சுமி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்! அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி!