முள் மேல் படுக்கை! மக்களுக்கு குறி சொல்லும் நாக ராணி! சிவகங்கையை கலக்கும் வினோதம்!



Women lying down top of thorns at sivakangai

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் இருக்கே உள்ளது லாடனேந்தல். மார்கழி மாதம் வந்துவிட்டாலே இங்குள்ள முத்துமாரியம் கோவிலில் கூட்டம் அலைமோத தொடங்கிவிடும். அதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது நாக ராணி அம்மையாரின் முள்படுக்கையும், அவர் வழங்கும் ஆசிர்வாதமும்தான்.

ஆம், முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் வந்துவிட்டாலே நாகராணி அம்மையார் என்பவர் முள்படுக்கையில் அமர்ந்து தவம் செய்வது வழக்கம். இதற்காக, கற்றாழை முள் உள்ளிட்ட பல்வேறு வகை முட்களை ஒன்றுசேர்த்து சுமார் 4 அடி உயரத்திற்கு முள்படுக்கை அமைக்கப்படுகிறது.

Mystery

பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து புண்ணிய தீர்த்தம் அந்த முள் படுக்கை மீது தெளிக்கப்பட்ட பின்னர் நாக ராணி அம்மையார் அந்த முள் படுக்கை மீது படுத்து தவம் செய்து மக்களுக்கு அருள்வாக்கு கூறிவருகிறார்.

பிள்ளை வரம் வேண்டி, திருமண வரம் வேண்டி, வேலை வேண்டி இப்படி பல்வேறு பிரார்த்தனைகளை மனதில் கொண்டு ஏராளமான மக்கள் நாக ராணி அம்மையாரிடம் ஆசி வாங்கி செல்கின்றனர்.