10 வயது மகளை மிரட்டி பலாத்காரம் செய்த தாயின் 2-வது கணவர்.! அதிர்ச்சி சம்பவம்.!

10 வயது மகளை மிரட்டி பலாத்காரம் செய்த தாயின் 2-வது கணவர்.! அதிர்ச்சி சம்பவம்.!


wife-second-husband-abused-her-child

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் திருமணமாகி தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு அதே பகுதியை சேர்ந்த கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.  இதனையடுத்து அந்த பெண்ணை பிரகாஷ் 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுக்கு முதல் கணவர் மூலம் 10 வயதில் ஒரு பெண் குழந்தையும்,8 வயதில் ஒரு பெண் குழந்தைகள் இருந்துள்ளன. இந்த நிலையில் பிரகாஷ் தனது 2-வது மனைவி மற்றும் அவருடைய குழந்தைகளுடன் கோவை மாவட்டத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அங்கு கட்டிட வேலை செய்து வந்துள்ளார்.

அவர்களுடன் வசித்துவந்த இரண்டு பெண் குழந்தைகளும் பிரகாஷை அப்பா என்று அழைத்து வந்துள்ளனர். ஆனால் பிரகாஷ் 10 வயது நிரம்பிய மூத்த பெண் குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து யாரிடமாவது கூறினால் உன்னையும், தங்கை மற்றும் அம்மாவையும் கொன்றுவிடுவதாக பிரகாஷ் மிரட்டியதாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில், தனது மனைவி வெளியே சென்ற நேரத்தில் பிரகாஷ் மூத்த மகளை ழிவறைக்கு அழைத்து சென்று கதவை பூட்டிக்கொண்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியே சொன்னால் அப்பா குடும்பத்தினரை கொலை செய்துவிடுவார் என்ற பயத்தில் சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். ஆனால் தனது அக்காவை, பிரகாஷ் கழிவறைக்கு அழைத்து சென்றதை 8 வயது சிறுமி பார்த்து உள்ளார். இதனையடுத்து வீடுதிரும்பிய தனது தாயிடம் அவர் இது குறித்து கூறியுள்ளார்.

daughter

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் மூத்த மகளிடம் கேட்டபோது, அவர் பிரகாஷ் தன்னை பலாத்காரம் செய்ததையும், வெளியே சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டியதையும் கூறி அழுதுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியை பலாத்காரம் செய்தது பிரகாஷ் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் பிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.