மகனின் ஆசையை நிறைவேற்ற முடியாமல், மகளுடன் தாய் விபரீத முடிவு.. கண்ணீரை வரவழைக்கும் சோகம்..!

மகனின் ஆசையை நிறைவேற்ற முடியாமல், மகளுடன் தாய் விபரீத முடிவு.. கண்ணீரை வரவழைக்கும் சோகம்..!


viruthunagar-sivakasi-mother-daughter-suicide-died

தனது மகனின் ஒரேயொரு ஆசையை வறுமையால் நிறைவேற்ற இயலாத தாயின் முடிவால் மகன் தந்தையுடன் செல்ல, தாய் மகளுடன் உயிரை மாய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, விஸ்வநத்தம் திருவள்ளுவர் நகரில் வசித்து வருபவர் வனிதா ராணி (வயது 35). இவரின் கணவர் வேலுசாமி. தம்பதிகள் குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். வேலுசாமி அங்குள்ள மலையடிப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றுகிறார். 

வனிதா ராணியுடன் தம்பதியின் குழந்தைகளான லோகேஷ் (வயது 15), காவிய பிரியா (வயது 12) ஆகியோர் இருக்கின்றனர். இவர் பட்டாசு தொழிற்சாலையில் பணியாற்றி குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். லோகேஷ் பத்தாம் வகுப்பு பயின்றுள்ள நிலையில், தன்னை பாலிடெக்னீக் கல்லூரியில் சேர்க்க தாயிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். 

தாயோ படிக்க வைக்க வசதியில்லாமல் இருந்ததால் மகனிடம் குடும்ப சூழலை தெரிவித்து இருக்கிறார். தாயின் முடிவை மகன் தந்தையிடம் தெரிவிக்க, அவரோ நேரடியாக வந்து மகனை தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். இதனால் வனிதா ராணி மனவேதனைக்கு உள்ளாக, மகளுடன் தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். 

வீட்டில் தாயும் - மகளும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், அக்கம் பக்கத்தினர் தாமதமாக இதனை கவனித்து சிவகாசி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சிவகாசி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.