6 மாதம் அட்ஜெஸ்ட் செய்தால் வீடு, கார்., 4 நடிகைகளை நாசம் செய்த பிரபல இயக்குனர் - சிப்பிக்குள் முத்து சீரியல் நடிகை பகீர்..!!



Vijay TV Sippikul Muthu Serial Actress Lavanya Pressmeet

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி குறுகிய காலத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த சீரியல் சிப்பிக்குள் முத்து. இதில் தனது தங்கையின் காதலை நிறைவேற்றுவதற்காக, மனநிலை சரியில்லாத அண்ணனை சீரியலின் நாயகி திருமணம் செய்துகொள்கிறார்.

அதன் பின் கதாநாயகி வாழ்க்கையில் நடக்கும் சுவாரசியமே நெடுந்தொடரின் கதை. இத்தொடரில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் இடம்பிடித்தவர் லாவண்யா. இவர் மாடலிங் மூலம் மீடியாவிற்குள் நுழைந்த நிலையில், வெப்சீரிஸ் படங்கள் என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

vijay tv

சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து கூறியுள்ளார். அதில், "நான் மீடியாவில் நுழைவதற்கு முன் பேங்கில் வேலை செய்துகொண்டிருந்தேன். அது எனக்கு பிடிக்காத வேலை என்பதால், பிடித்த வேலையை செய்ய வேண்டும் என்று மீடியாவை தேர்வு செய்தேன். ஒருமுறை நான் சூட்டுக்கு போன அந்த இடம் சரியில்லை என்று என் மனதிற்குள் தோன்றியது. 

அதனால் கேப் டிரைவரிடம் அதிக பணம் கொடுக்கிறேன். இங்கிருந்து என்னை கூட்டி சென்றுவிடுங்கள் என்று சொல்லிவிட்டு, அந்த இடத்திற்குள் சென்றேன். அந்த இடம் மிகவும் இருட்டாக இருந்தது. அப்பொழுது வேறு வேறு காஸ்டியூமில் டெஸ்ட் செய்ய வேண்டும் என்று கூறி ஏழு உடையை கொண்டு வர கூறினார்கள். 

vijay tv

நான் உள்ளே ஒரு கார்மெண்ட் போட்டுதான் சென்றேன். உடைமாற்றும் பொழுது கேமரா இருக்கும் என்ற எண்ணம் எப்பொழுதும் என் மனதிற்குள் இருக்கும். கார்மெண்ட் போட்டிருந்ததால், தைரியமாக உடை மாற்ற சென்றேன். பின் அவர்கள் என்னிடம் காண்டாக்ட் வாங்குவதில் மட்டும் குறியாக இருந்தார்கள். 

vijay tv

வீட்டில் நான் பணரீதியாக கஷ்டப்படுகிறேன் என்பதை அறிந்த இயக்குனர் என்னிடம் மட்டும் காண்டக்ட்டில் 6 மாதம் இருந்தால், வேறலெவலுக்கு சென்றுவிடுவாய் என்று கூறினார். அதாவது 6 மாசம் அவன் கூடவே நான் தங்கி இருக்கணும் என்று சொன்னார். அது மட்டுமில்லாமல் மீடியாவில் இருக்கும் 4 பெண்கள் பெயரை கூறி, அவர்கள் ஒண்ணுமே இல்லாமல் இருந்தார்கள். 

vijay tv

இப்ப வீடு, கார் என எப்படி இருக்கிறார்களோ நீயும் அப்படி இருக்கலாம் என்று சொன்னார். அதற்கு நான் ஏதும் ரியாக்ட் செய்யாமல் இருந்தேன். ஏதாவது ரியாக் பண்ணியிருந்தால் என்னை தப்பான பொண்ணுன்னு சொல்லிடுவான். எப்பவும் நமக்கு நம்ம பாதுகாப்பு தான் முக்கியம்" என்று கூறியிருந்தார்.