கிராம நிர்வாக அலுவலர் தூக்கிட்டு தற்கொலை.! சோக சம்பவம்.!

கிராம நிர்வாக அலுவலர் தூக்கிட்டு தற்கொலை.! சோக சம்பவம்.!



vao suicide attempt in salem

சேலம் மாவட்டம் பேளூர் அருகே புழுதிகுட்டை கிராம நிர்வாக அலுவலர் சரவணன், கன்னங்குறிச்சியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துக் கொண்டார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் பேளூர் அருகில் உள்ள புழுதிகுட்டை கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்தவர் சரவணன்(42). இவர் சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் வசித்து வந்துள்ளார். குடும்ப தகராறு காரணமாக சனிக்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் சரவணன். இதனையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் குடும்பத்தினர்.

vao

ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார் சரவணன். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.