திருமணமான பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை! நண்பர்களுடன் சேர்ந்து செய்த கொடூர சம்பவம்!
திருமணமான பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை! நண்பர்களுடன் சேர்ந்து செய்த கொடூர சம்பவம்!
சென்னையில் திருமணமான பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக ஹரீஷ்குமார், ரமேஷ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்து மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை நெசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஸ்குமார் மற்றும் அவரது நண்பர் ரமேஷ்குமார் என்பவருடன் சேர்ந்து திருமணமான பெண்ணிற்கு உணவில் மயக்கமருந்தது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
அதனை செல்போனில் படம்பிடித்து மிரட்டி தனது நண்பர்களுடன் சேர்ந்து வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் அந்த பெண்ணின் நகைகளையும் பறித்துள்ளனர். ஒருகட்டத்தில் அவர்களின் தொல்லை எல்லைமீறியதால் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
இந்த புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ஹரீஷ்குமார், ரமேஷ்குமார் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.