டியூஷனுக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. ஆசிரியரின் கணவர் கைது!
டியூஷனுக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. ஆசிரியரின் கணவர் கைது!
சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அதே பகுதியை சேர்ந்த ஆசிரியர் ஒருவரிடம் டியூஷன் சென்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுமி டியூஷன் சென்றுவிட்டு வாட்டர் பாட்டிலை மறந்து வைத்து விட்டார்.
இதனையடுத்து மீண்டும் டியூஷன் சென்டருக்கு சென்று வாட்டர் பாட்டிலை எடுக்க சென்றுள்ளார். அப்போது அந்த அறையில் இருந்த ஆசிரியரின் கணவர் சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கத்திக்கொண்டே வீட்டிற்கு சென்றுள்ளார்.
அதன் பின்னர் வீட்டிற்கு வந்ததும் இது குறித்து தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரின் கணவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.