ஒரே இருசக்கர வாகனத்தில் நண்பர்களாக பயணம்; லாரி மீது மோதி மூவரும் பரிதாப பலி.!

ஒரே இருசக்கர வாகனத்தில் நண்பர்களாக பயணம்; லாரி மீது மோதி மூவரும் பரிதாப பலி.!



Trichy Bharathidasan University Students 3 Died an Accident Near Trichy Mathur 

 

திருச்சி மாவட்டத்தில் உள்ள பாரதிதாசன் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் சேலத்தை சேர்ந்த ரங்கநாதன், சென்னையை சேர்ந்த வல்லரசு, அரியலூரை சேர்ந்த லெனின். 

இவர்கள் மூவரும் நண்பர்கள் ஆவார்கள். சம்பவத்தன்று இவர்கள் மூவரும் அதிகாலை நேரத்தில் திருச்சி நோக்கி தங்களின் ஒரே இருசக்கர வாகனத்தில் மூவராக பயணம் செய்துள்ளனர். 

அச்சமயம் இவர்களின் வாகனம் மாத்தூர் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த லாரியின் மீது மோதி விபத்தில் சிக்கி இருக்கின்றனர். இந்த விபத்தில் லெனின் தவிர்த்து எஞ்சியோர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிருக்கு போராடிய லெனினை மீட்ட பொதுமக்கள், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிசெய்தபோது, அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

விதியை மீறி மூவராக பயணம் செய்தது விபத்திற்கு முதல் காரணமாக அமைந்துள்ளது.