பகீர் சம்பவம்... கொலையில் முடிந்த முக்கோண கள்ளக்காதல்.!! பதற வைக்கும் பின்னணி.!!

பகீர் சம்பவம்... கொலையில் முடிந்த முக்கோண கள்ளக்காதல்.!! பதற வைக்கும் பின்னணி.!!



triangle-illicit-relationship-ends-in-murder-2-arrested

தேனி மாவட்டம் கம்பத்தில் தகாத உறவில் ஏற்பட்ட தகராறு 24 வயது இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 2 பேரை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கம்பம் பாரதியார் நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு சதீஷ். 24 வயதான இவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்திருக்கிறார். இந்நிலையில் சதீஷுக்கும் மஞ்சள் குளம் சாலை பகுதியைச் சேர்ந்த நந்தினி என்ற 31 வயது பெண்ணிற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. நந்தினியின் கணவர் இறந்து விட்ட நிலையில் அவர் சதீஷ் உடன் கள்ளக்காதலில் இருந்திருக்கிறார்.

tamilnaduஇந்நிலையில் நந்தினிக்கு பிரபாகரன் என்ற 27 வயது  இளைஞருடனும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. பிரபாகரன் அடிக்கடி நந்தினி வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இது சதீஷ்க்கு தெரிய வரவே அவர் நந்தினி மற்றும் பிரபாகரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு சதீஷ் தனது கள்ளக்காதலி நந்தினியை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பிரபாகரன் நந்தினியுடன் இருந்துள்ளார் .

tamilnaduஇதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த சதீஷ் பிரபாகரனுடன் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலின் போது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சதீஷை கொடூரமாக குத்திருக்கிறார் பிரபாகரன். பதிலுக்கு சதீஷும் கண்ணாடி துண்டுகளால் பிரபாகரனை தாக்கி இருக்கிறார். இந்த சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். படுகாயம் அடைந்த சதீஷ் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக நந்தினி மற்றும் பிரபாகரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.