#Breaking: அரசு ஊழியர்களுக்கு Good News.. அகவிலைப்படி உயர்வு செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!
#Breaking: அரசு ஊழியர்களுக்கு Good News.. அகவிலைப்படி உயர்வு செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் அனைவர்க்கும் அரசின் சார்பில் பண்டிகை காலங்களில் ஊதிய உயர்வு போன்ற அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. இதற்கிடையில் இன்று அரசு ஊழியர்களுக்கான நல்ல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 34% ல் இருந்து 38% ஆக உயர்த்தி அளிக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அரசு ஊழியர்களில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அரசு பணியளர்களுக்காக 4% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் 16 இலட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் அவரின் குடும்பத்தினர் பலன்பெறுவர்கள் என்றும், அரசுக்கு ஆண்டுக்கு 2,350 கோடி ரூபாய் செலவினம் என்றாலும், அவர்களின் நலன்கருதி அகவிலைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு முதல்வர் தெரிவித்து இருக்கிறார்.