தாயின் நொடிப்பொழுது ஆத்திரத்தால் 6 வயது மகள் துள்ளத்துடிக்க பலி.. திருவண்ணாமலையில் கண்ணீர் சோகம்.!

தாயின் நொடிப்பொழுது ஆத்திரத்தால் 6 வயது மகள் துள்ளத்துடிக்க பலி.. திருவண்ணாமலையில் கண்ணீர் சோகம்.!


Tiruvannamalai Mother Killed Minor Girl Daughter

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரடாப்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் பூபாலன் (வயது 38). இவரின் மனைவி சுகன்யா (வயது 30). பூபாலன் சாலை அமைக்கும் கூலித்தொழிலாளி ஆவார். தம்பதிகளுக்கு பிரசன்ன தேவ் (வயது 8) என்ற மகனும், ரித்திகா (வயது 6) என்ற மகளும் இருக்கின்றனர். குழந்தைகள் அங்குள்ள அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். 

பூபாலன் - சுகன்யா இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இவ்வாறு வாதம் ஏற்படும் நேரங்களில் சுகன்யா தாயின் வீட்டிற்கு செல்வதை வழக்கமாக்கியுள்ளார். அவரின் பெற்றோர் சமாதானம் செய்து கணவருடன் வாழ அனுப்பி வைத்துள்ளனர். 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பூபாலன் சாலை அமைக்கும் பணிக்காக தேனி சென்றுள்ளார். நேற்று விடுமுறை நாளில் ஊருக்கு திரும்பிய நேரத்தில், குழந்தைகள் வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது, ரித்திகா சத்தமிட்டு அழுதுள்ளார். தாய் சுகன்யா இதனை பலமுறை கண்டித்தும் ரித்திகா கேட்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த சுகன்யா கரும்பை எடுத்து ரித்திகாவை அடிக்கவே, அவரின் தலையின் பின்பகுதியில் காயம்பட்டு மயங்கி விழுந்துள்ளார். மகள் மயங்கி விழுந்ததை கண்டு பதறிப்போன சுகன்யா, ரித்திகாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

மகளின் உடலை கட்டியணைத்தவாறே கண்ணீருடன் வீட்டிற்கு திரும்பிய நிலையில், ரித்திகாவின் உடலை கணவர் மற்றும் உறவினர்களுக்கு பயந்து கீழ்பென்னாத்தூரில் உள்ள தாயின் வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார். இந்த தகவல் அறிந்து வந்த பூபாலன் மகளின் சடலத்தை பார்த்து கதறியழுதார். 

பின்னர், இதுகுறித்து வெறையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ரித்திகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சுகாயவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.