கள்ளக்காதலியுடன் கடலைபோட்ட கள்ளக்காதலன்.. டமால்., டுமீளென சுட்டுத்தள்ளிய 2 பொண்டாட்டிக்காரர்.. தமிழகத்தில் பகீர்.!

கள்ளக்காதலியுடன் கடலைபோட்ட கள்ளக்காதலன்.. டமால்., டுமீளென சுட்டுத்தள்ளிய 2 பொண்டாட்டிக்காரர்.. தமிழகத்தில் பகீர்.!



Tiruvannamalai Husband Murder Attempt Wife Affair Man Police Arrest 3 and Make Gun Fire

தனது கண்டிப்பையும் மீறி கள்ளக்காதலனுடன் பேச மனைவி சென்றதால், ஆத்திரமடைந்த கணவர் நாட்டு துப்பாக்கியால் மனைவியின் கள்ளக்காதலனை சுட்டு கொலை செய்ய முயற்சித்த சம்பவம் நடந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேடியப்பனூர், செல்வபுரம் கொல்லக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 49). இவர் விவசாயியாக இருந்து வருகிறார். சின்ன துரைக்கு 2 மனைவிகள் இருக்கிறார்கள். இவரின் இரண்டாவது மனைவி சுதாவிற்கும், திருவண்ணாமலை அண்ணா நகரை சேர்ந்த ஹாஜி பாஷா (வயது 35) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த பழக்கமானது இவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். கள்ளக்காதல் விவகாரம் சின்னத்துரைக்கு தெரியவரவே, அவர் சுதாவை கண்டித்து இருக்கிறார். அப்போதும் கள்ளக்காதலை கைவிட சுதா தயாராக இல்லை. இதனால் கணவன் - மனைவி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்த நிலையில், நேற்று முன்தினத்தில் பெரியபாலியப்பட்டு கிராமத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கள்ளக்காதல் ஜோடி நேரில் சந்தித்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். இந்த தகவல் சின்னத்துரைக்கு தெரியவரவே, வேடியப்பனூர் பகுதியை சேர்ந்த நண்பர் மணியிடம் (வயது 44) நாட்டு துப்பாக்கி வாங்கி வந்து, மற்றொரு நண்பர் சத்தியமூர்த்தியின் உதவியுடன் கள்ளக்காதல் ஜோடியை தேடி சென்றுள்ளார்.

Tiruvannamalai

கள்ளக்காதல் ஜோடிகளை நேரில் பார்த்து உச்சகட்ட ஆத்திரத்திற்கு சென்ற சின்னத்துரை, தான் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் ஹாஜி பாஷாவை சுட்டுத்தள்ளியுள்ளார். இதனால் ஹாஜி பாஷாவின் முழங்கை, இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் குண்டு பாய்ந்து அலறியிருக்கிறார். துப்பாக்கி சத்தம் கேட்டு உள்ளூர் பொதுமக்கள் விரைந்துவிடவே, சின்னத்துரை மற்றும் சத்தியமூர்த்தி அங்கிருந்து தப்பி சென்றனர். 

பின்னர், சம்பவ இடத்தில் படுகாயமடைந்து துடித்துக்கொண்டு இருந்த ஹாஜி பாஷாவை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஹாஜி பாஷாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சின்னத்துரை மற்றும் சத்தியமூர்த்தியை கைது செய்தனர். மேலும், நாட்டு துப்பாக்கியை கொடுத்த மணியும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.