கூட்ட நெரிசலை பயன்படுத்தி 52 வயது பெண்ணிடம் 2 இளம்பெண்கள் பகீர் செயல்.. சி.சி.டி.வி-யால் சிக்கிய கேடி கேர்ல்ஸ்.!

கூட்ட நெரிசலை பயன்படுத்தி 52 வயது பெண்ணிடம் 2 இளம்பெண்கள் பகீர் செயல்.. சி.சி.டி.வி-யால் சிக்கிய கேடி கேர்ல்ஸ்.!



Thoothukudi Vilathikulam Robbery Girls Arrested by Police

கூட்ட நெரிசலை உபயோகம் செய்து பயணியிடம் கைவரிசை காண்பித்த 2 இளம்பெண்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம், காமராஜர் நகரில் வசித்து வருபவர் பால்சாமி. இவரின் மனைவி முத்துலட்சுமி (வந்து 52). கடந்த மாதம் 30 ஆம் தேதி முத்துலட்சுமி விளாத்திகுளத்தில் இருந்து கோவில்பட்டி செல்ல விளாத்திகுளம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். 

அப்போது, அவ்வழியே கோவில்பட்டி செல்ல வந்த பேருந்தில் பலரும் கூட்ட நெரிசலில் முண்டியடித்து ஏறியுள்ளனர். முத்துலெட்சுமியும் கூட்டத்தில் அடியும் புடியுமாக ஏறிய நிலையில், அவர் கைப்பையில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் பணம் மாயமாகியுள்ளது. இதனால் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பணம் திருடுபோனது அம்பலமானது. 

Thoothukudi

இதனையடுத்து, விளாத்திகுளம் காவல் நிலையத்தில் முத்துலட்சுமி புகார் அளிக்கவே, நிகழ்விடத்தில் இருந்த சி.சி.டி.வி கேமிரா உதவியுடன் காட்சிகள் சோதனைக்குள்ளாக்கப்பட்டபோது 2 இளம்பெண்கள் கூட்ட நெரிசலில் முத்துலட்சுமியின் பணத்தை திருடி சென்றது அம்பலமானது.  

சி.சி.டி.வி கேமிரா காட்சிகளின் அடிப்படையில் முள்ளக்காடு பகுதியில் வசித்து வரும் சத்யா (வயது 35), சந்தனமர (வயது 22) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர்.