25 வயது இளைஞர் 4 பேர் கும்பலால் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை: துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்.!



Thiruvallur Cholavaram Man Killed by Strangers 

 

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள சோழவரம், காரனோடை, லட்சுமி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சரத்பாபு (வயது 25). கூலித்தொழிலாளியாக வேலை பார்க்க வருகிறார். நேற்று முன்தினம் காலை நேரத்தில் வேலைக்கு சென்ற நிலையில், வேலை முடிந்து இரவு 10 மணி அளவில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். 

அச்சமயம் காரனோடை லட்சுமி அம்மன் கோவில் பின்புறம் வந்த சமயத்தில், இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், சரத் பாபுவை கத்தி, அரிவாள் உட்பட பயங்கர ஆயுதங்களால் வழிமறித்து வெட்டிக்கொலை செய்ய முயற்சித்து இருக்கிறது. 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சரத் பாபு அங்கிருந்தது தப்பியோட முயற்சித்த நிலையில், அவரை விரட்டிச் சென்ற கும்பல் சரமாரியாக வெட்டி சாய்த்தது. இந்த சம்பவத்தில் அவர் நிகழ்விடத்திலேயே இரத்த வெள்ளத்தில் மயங்கி உயிரிழந்தார். 

சரத்தின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து சோழவரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், அவரின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரத் பாபாவின் மீது காவல் நிலையத்தில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதால், முன்விரோதத்தால் கொலை நடந்ததா? கூட்டாளிகள் கொலை செய்தனரா? என பல கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.