அஜித்திற்காக அவரது மனைவி ஷாலினி செய்த செயல்.! வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி.!?
பச்சிளம் குழந்தையை ஈவுஇரக்கமின்றி கொலை செய்த தாய்; தலைப்பிள்ளையை பறிகொடுத்து கபடநாடகம்.!
பச்சிளம் குழந்தையை ஈவுஇரக்கமின்றி கொலை செய்த தாய்; தலைப்பிள்ளையை பறிகொடுத்து கபடநாடகம்.!
தேனி மாவட்டத்திலுள்ள போடி பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன் (வயது 23), இவர் கூலித் தொழிலாளி ஆவார். கம்பம் பகுதியை சார்ந்தவர் சினேகா (வயது 19).
தம்பதிகளுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கிடையே கர்ப்பமாக இருந்த கர்ப்பிணிக்கு வளைகாப்பு நடத்தி, தாய் வீட்டில் பிரசவம் பிரசவத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் சினேகாவுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், அவர் தனது தாயார் சரஸ்வதியுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 22 ஆம் தேதி திடீரென குழந்தை மாயமான நிலையில், பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
இதனிடையே, வீட்டிலிருந்த பால் கேனுக்குள் குழந்தை இறந்து கிடந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக கம்பம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், குழந்தை பிறந்து 25 நாட்களுக்குள் உயிரிழந்தது.
இந்நிலையில், விசாரணையில் குழந்தையை தாய் சினேகா கொலை செய்தது உறுதியாகி உள்ளது. சம்பவத்தன்று தனது தாயாரை குளிர்பானம் வாங்க வீட்டிலிருந்து வெளியே அனுப்பி சினேகா, குழந்தையை பால் கேனில் திணித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் சந்தேகம் வராத அளவு பாத்ரூமுக்குள் குளிப்பது போல நாடகமாடி, உறவினர்களுடன் குழந்தையை தேடித்திரிந்து இருக்கிறார். எதற்காக குழந்தை கொலை செய்யப்பட்டது என விசாரணை நடந்து வருகிறது.