ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
அதுக்குள்ள இப்படியா நடக்கணும்! ராமேஸ்வரத்திற்கு காரில் வந்த குடும்பம்! ஹோட்டல் அருகே நின்ற கார்! சாப்பிட்டு வந்தவர்களுக்கு காரில் காத்திருந்த பேரதிர்ச்சி!
ராமநாதபுரம் மாவட்டத்தின் பிரபல ஆன்மீக சுற்றுலா தலம் ராமேஸ்வரம் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு புனித தர்ப்பண நிகழ்வுகளால் களைகட்டியது. தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
அந்த வகையில், ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த 7 பேர் ராமேஸ்வரத்தில் உள்ள புறநகர ஹோட்டல் அருகே காரை நிறுத்தி, சாப்பிட ஹோட்டலுக்கு சென்றனர். பின்னர் திரும்பி வந்தபோது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு, காரில் இருந்த பை மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது.
அந்த பையில் 5 தங்க மோதிரம், வைர மோதிரம், ரூ.10,000 பணம், மற்றும் செல்போன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர்.
இதையும் படிங்க: அதிர்ச்சி! கிணற்றில் மிதந்த அடையாளம் தெரியாத ஆணின் உடல்! உடல் பாகங்கள் சில காணவில்லை! சிவகங்கையில் பரபரப்பு...
ராமேஸ்வரம் போலீசார் சிசிடிவி காட்சிகளை சேகரித்து, மர்ம நபர்களை கண்டறியும் விசாரணையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: யூடியூப் டயட் வீடியோ பார்த்து உடல் எடை குறைக்க முயன்ற 2 இளம் உயிர்கள் பலி ! மருத்துவர்கள் எச்சரிக்கை...