காதல் மனைவியை கொலை செய்த விவகாரம்!.. காரணத்தை போட்டு உடைத்த கணவன்: அதிர்ச்சியில் உறைந்த போலீஸ்..!

காதல் மனைவியை கொலை செய்த விவகாரம்!.. காரணத்தை போட்டு உடைத்த கணவன்: அதிர்ச்சியில் உறைந்த போலீஸ்..!



The husband gave the reason for the murder of his love wife

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகேயுள்ள பள்ளவிளை கிராமத்தை சேர்ந்தவர் அனந்த நாடார். இவரது மகள் பத்மா. இவர் பரமார்த்தலிங்கபுரம் பகுதியை சேர்ந்த ஆண்டனி பெனிஸ்டர் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதற்கிடையே இவர்கள் இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த காதல் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், தம்பதியினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து விவாகரத்து வழங்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இருந்த போதும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பத்மா மர்மமான முறையில் உயிரிழந்தார்.

மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி புகாரளிக்க பத்மாவின் தந்தை அனந்த நாடார் வடசேரி காவல் நிலையத்திற்கு வந்தார். அப்போது பத்மாவின் கணவர் ஆண்டனி பெனிஸ்டர் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறி வடசேரி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இதனை தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

எனது மனைவி பத்மா வீட்டில் யாரும் இல்லாதா போது தொடர்ந்து யாருடனோ செல்போனில் பேசிவந்தார். இதனால் அவரது நடத்தை யில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து அவரிடம் விசாரித்த போது, நமக்கு தான் விவாகரத்து ஆகப் போகிறதே, நான் யாருடன் பேசினால் உனக்கு என்ன என்று என்னிடம் கேட்டார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து அவரது கழுத்தை நெரித்தேன். இதன் காரணமா பத்மா மயங்கி விழுந்தார். பின்னர் அங்கிருந்து வெளியில் சென்றேன். பின்னர் சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த போது எனது மனைவி உயிரிழந்த தகவல் தெரிய வந்தது. இதனையடுத்து நான் காவல் நிலையத்தில் சரண் அடைந்தேன் என்று அவர் கூறியுள்ளார். இதனை கேட்ட பத்மாவின் தந்தை மற்றும் காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.