ஒரு முறை பார்த்ததை பல முறை ரசிக்க நினைத்த சிறுவன்: நிர்வாண வீடியோ கால் பேசியதால் சிக்கலில் சிக்கிய சிறுமி..!

ஒரு முறை பார்த்ததை பல முறை ரசிக்க நினைத்த சிறுவன்: நிர்வாண வீடியோ கால் பேசியதால் சிக்கலில் சிக்கிய சிறுமி..!



The girl got into trouble for making a nude video call

கோயம்புத்தூர், கோவில்பாளையம் பகுதிய சேர்ந்தவர் அந்த சிறுமி (16). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு இவரது வகுப்பில் படித்த மாணவர் ஒருவருடன் சிறுமிக்கு பழக்கம் இருந்ததுள்ளது. அவர் 10 ஆம் வகுப்பில் ஃபெயில் ஆனதால் வீட்டில் இருந்து வருகிறார்.

இருந்த போதும் இருவரும் செல்ஃபோனில் பேசுவதை வாடிக்கையாக் கொண்டு இருந்துள்ளனர். நாளைடைவில் இவர்களின் பழக்கம் காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில், போனில் மட்டுமே பேசி வந்த அவர்கள் நாளடைவில் வாட்ஸ்-அப்  வீடியோ கால் மூலமும் பேசி பழகி வந்துள்ளனர்.

அந்த சமயத்தில் அந்த சிறுவன், சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் பேசியுள்ளார். இதனால் மயங்கிய சிறுமி அவருடன் தொடர்ந்து தினமும் பேசிவந்துள்ளார். இந்த நிலையில், தனது காதலியான சிறுமியை நிர்வாணமாக பார்க்க விரும்புவதாக சிறுவன் தெரிவித்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த சிறுமியிடம் மேலும் ஆசை வார்த்தைகள் கூறி தன்னுடைய இச்சைக்கு இணங்க வைத்துள்ளார்.

இதற்கிடையே, மீண்டும் ஒருநாள் தனது காதலியை நிர்வாணமாக பார்க்க விரும்புவதாக கூறியுள்ளார். இதற்கு இந்த முறை சிறுமி இணங்க வில்லை, பிடிவாதமாக மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன், நீ முன்னதாக நிர்வாணமாக நின்றதை நான் வீடியோவாக பதிவு செய்துள்ளேன். நீ இப்போது அப்படி வரவில்லை என்றால் அந்த காட்சிகளை உனது பெற்றோருக்கு அனுப்பி வைத்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

மேலும், அத்தாட்சிக்காக அடுத்த நிமிடமே சிறுமியின் செல்போனுக்கு அவர் நிர்வாணமாக பேசிய வீடியோ காட்சிகளை அந்த சிறுவன் அனுப்பி வைத்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமி, தனது பெற்றோரிடம் சிறுவனின் மிரட்டல் குறித்து கூறியுள்ளார். இதைனை தொடர்ந்து மகளை கண்டித்த பெற்றோர் கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ஜெயாதேவி சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இத்தனைக்கும் சிறுமிக்கு,  தன்னுடன் பழகிய சிறுவன் எந்த ஊர் என்று கூட அறியாமல் அவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். ஆகவே அவர் எந்த ஊர் என்பதை கண்டறிந்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.