பகீர் சம்பவம்...தோழி மற்றும் காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்து கட்டியது எப்படி.?ஆசிரியை பரபரப்பு வாக்குமூலம்,!



teacher-confession-about-how-she-killed-her-husband-wit

சேலம் மாவட்டத்தில் தலையணையால் அழுத்தி கணவனை கொலை செய்துவிட்டு  தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான அவரது வாக்குமூலம் பல திடுக்கிட்டு உண்மை சம்பவங்களை வெளிக்கொண்டு வந்துள்ளது.  

சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தை சேர்ந்தவர்  சுந்தர்ராஜ்(32). இவரது மனைவி நிவேதிதா(27). இந்த தம்பதியினருக்கு ஏழு வயதில் மகன் இருக்கிறான். பெங்களூருவில் வேலை பார்த்து வந்த சுந்தர்ராஜ் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பி தறி வேலை செய்து வந்தார். நிலையில் கடந்த ஜூலை 17ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு வீட்டில் சடலமாக தூக்கில் தொங்கி இருக்கிறார். இது தொடர்பாக தற்கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

tamilnaduஇந்நிலையில் அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் தூக்கில் தொங்கியது போல்  கழுத்து இருக்காமல் மூச்சுத் திணறி இறந்திருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினருக்கு அவரது மனைவி நிவேதிதா மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவரை தலையணை வைத்து அழுத்தி கொலை செய்ததை ஒத்துக் கொண்டார் .

tamilnaduஇது தொடர்பாக காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்திருக்கும் அவர் கணவர் ஊரில் தொழில் செய்து வந்தபோது தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிய போது பள்ளி தோழி விதியாவின் மூலம் தினேஷ் என்ற நபர் அறிமுகமாக இருக்கிறார். இதனைத் தொடர்ந்து தினேஷ் மற்றும் நிவேதிதா இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இதனை அறிந்த சுந்தர்ராஜ்  நிவேதிதாவை கண்டித்ததோடு அவரது செல்போனையும் பறித்து வைத்துள்ளார். இதனால் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டிய நிவேதிதா தனது தோழி வித்யா மற்றும் கள்ளக்காதலன் தினேஷ் ஆகியோரின் உதவியுடன் சுந்தர்ராஜிற்கு தூக்க மாத்திரைகளை கொடுத்து அவரை தலையணை வைத்து அழுத்தி கொலை செய்து பின்னர் மூன்று பேரும் சேர்ந்து அவரது உடலை தூக்கில் தொங்க விட்டதை வாக்கு மூலத்தில்  தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நிவேதிதா, தினேஷ் மற்றும் வித்யா ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.