BREAKING: அதிர்ச்சி..... டாஸ்மாக் கடைகளுக்கு CM விஜய் போடப்பட்ட முதல் உத்தரவு மறுஆய்வு முடியும் வரை நிறுத்தம்....!!!
தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகளை மூடும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 500 மீட்டர் சுற்றளவு விதிமுறையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த முடிவு, மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, மக்கள் நலனை முன்னிறுத்தி இந்த அதிரடி நடவடிக்கையை அறிவித்திருந்தது. குறிப்பாக பள்ளிகள், கோவில்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு அருகிலுள்ள டாஸ்மாக் கடைகள் உடனடியாக மூடப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: BREAKING: மொத்த லிஸ்ட்டும் ரெடி.... தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு! எந்தெந்த இடங்களில் தெரியுமா?
500 மீட்டர் கணக்கீட்டில் சிக்கல்
ஆனால் கள ஆய்வின்போது பல நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு இடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவை எவ்வாறு துல்லியமாக அளவிடுவது, எந்த பாதையை அடிப்படையாக எடுத்துக்கொள்வது போன்ற கேள்விகளில் அதிகாரிகள் இடையே குழப்பம் நிலவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், சில பகுதிகளில் பட்டியலிடப்பட்ட கடைகள் விதிமுறைக்கு உட்படுகிறதா என்ற விவகாரமும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மறுஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மறுஆய்வு முடியும் வரை தற்காலிக நிறுத்தம்
தகவலின்படி, மாவட்ட அளவில் துல்லியமான கணக்கெடுப்பு மற்றும் அளவீட்டு பணிகள் நிறைவடையும் வரை, கடைகள் மூடல் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
அதேசமயம், அரசு தரப்பில் இருந்து இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், 500 மீட்டர் விதிமுறை தொடர்பான நடைமுறை அமல்படுத்தலில் அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: #சற்று முன் : மக்களே மகிழ்ச்சி செய்தி.... தமிழகத்தில் அனைவருக்கும் கடன் தள்ளுபடி... தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..!!!