குடிமகன்களுக்கு குஷியான செய்தி..! மே 7 முதல் தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க அனுமதி.!

குடிமகன்களுக்கு குஷியான செய்தி..! மே 7 முதல் தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க அனுமதி.!



tasmac-reopen-in-tamilnadu-from-may-7th

தமிழகத்தில் வரும் மே 7 ஆம் தேதி முதல் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இதனால் அனைத்து விதமான கடைகள், வணிக வளாகங்கள், மதுக்கடைகள் ஆகியவற்றை மூட மத்திய மாநில அரசுகள் உத்தரவிட்டது.

corono

இந்நிலையில், மே 17 வரை மூன்றாம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தமுறை சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் பச்சை மண்டலங்களாக கருதப்படும் பகுதிகளில் இன்றுமுதல் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிவழங்கப்பட்டு, கடைகள் இன்று திறக்கப்பட்டது.

ஆனால், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பது குறித்து அரசு எந்த அறிவிப்புகளையும் வெளியிடாமல் இருந்தநிலையில், வரும் 7 ஆம் தேதி முதல் காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணிவரை டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. அதன் விவரம் இதோ.

corono

corono