இனி தான் CM ஆட்டமே இருக்கு.... டாஸ்மாக் விஷயத்தில் முதல்வர் விஜய் கையில் எடுத்த மாஸ்டர் பிளான்.! தமிழ்நாட்டிற்கு வரப்போகும் அந்த 3 பெரிய மாற்றங்கள்.!!!



tasmac-reforms-tamil-nadu-government-new-policy

தமிழகத்தில் டாஸ்மாக் நிர்வாகத்தில் நீண்டகாலமாக எழுந்து வந்த குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்ற மாற்றங்களை படிப்படியாக செயல்படுத்தும் வகையில், மது விற்பனை நடைமுறைகள், ஊழியர் நலன் மற்றும் நிர்வாக வெளிப்படைத்தன்மை தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூடுதல் கட்டணம் வசூலிப்புக்கு கட்டுப்பாடு

மது பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக தொகை வசூலிக்கும் நடைமுறையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் 4,048 டாஸ்மாக் கடைகளில் சுமார் 1,500 முதல் 1,700 கடைகளில் இந்த நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை, சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளி மண்டலங்களில் இதற்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கோவை மற்றும் மதுரை மண்டலங்களில் மீதமுள்ள சவால்களை அடுத்த மூன்று மாதங்களில் முழுமையாக சரிசெய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: BREAKING: மொத்த லிஸ்ட்டும் ரெடி.... தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு! எந்தெந்த இடங்களில் தெரியுமா?

ஊழியர் நலன் மற்றும் புதிய நிர்வாக திட்டம்

டாஸ்மாக் ஊழியர்களின் ஊதிய உயர்வுடன், கடைகளின் வாடகை மற்றும் மின்சாரச் செலவுகளை அரசே ஏற்கும் திட்டமும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தற்போதுள்ள சாதாரண பார்களின் எண்ணிக்கையை குறைத்து, உணவக வசதியுடன் இயங்கும் 'ரெஸ்ட்ரோ-பார்' அமைப்புகளை அதிகரிக்கும் திட்டமும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

புதிய மதுபான கொள்கை குறித்து ஆய்வு

கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் நடைமுறையில் உள்ள மது விற்பனை முறைகளை ஆய்வு செய்து, பல்வேறு நிறுவனங்களின் முன்னணி மதுபான பிராண்டுகளை தமிழகத்தில் கிடைக்கச் செய்வது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது. அதே நேரத்தில், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. மேலும், 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக் கூடாது என்ற உத்தரவும் அமலில் உள்ளது. மது விற்பனை நிர்வாகத்தில் மாற்றங்கள் மேற்கொள்வது தொடர்பாக அண்டை மாநிலங்களின் நடைமுறைகள் குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதையும் படிங்க: இனி தான் ஆட்டமே இருக்கு... சரக்கு விஷயத்தில் அண்டை மாநிலங்களுக்கு பறக்கும் அதிகாரிகள்..! முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு!!!