தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!



tamilnadu people happy for weather report


வெப்பச்சலனம் காரணமாக 3 நாட்களுக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மாலத்தீவு , மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்றும் தமிழகத்தில் அடுத்த 24மணி நேரத்தில சில பரவலான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு லேசானது முதல் மிதமான அளவிற்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.      

Rain in chennai        

தமிழக்தில் தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கும், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த வானிலை அறிவிப்பால் தமிழக மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.