"இது நடந்தா நான் அரசியலுக்கே வரமாட்டேன்.!" -விஷால் விட்ட சவால்.!
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா.? தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்ன கூறியுள்ளார்?
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா.? தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்ன கூறியுள்ளார்?
தமிழகத்தில் கொரோனா நோய் அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நோயின் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கை நீட்டிப்பது பற்றி முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார்.
சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலக நாடுகளில் அதிகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் இந்த கொடூர வைரஸ் பரவ தொடங்கியதால் பிரதமர் மோடி, நாடு முழுவதும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாட்டில் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனாவை தடுப்பதற்கு மத்திய சுகாதாரத் துறை கடும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவிலும் கொரோனா தொற்று பரவல் சற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படுமா என்பதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்துள்ளார்.
தமிழக முதல்வர் கூறுகையில், தமிழகத்தில், நோயின் தாக்கத்தை பொறுத்துதான் முடிவு எடுக்கப்படும். நாளுக்கு நாள் இந்த தொற்று நோய் பரவலின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதையெல்லாம் ஆராய்ந்துதான் அரசு முடிவு செய்யும் என தெரிவித்தார்.