கடல் கடந்த காதல்! தமிழனை கரம்பிடித்த ஸ்வீடன் நாட்டு இளம்பெண்! வைரலாகும் கியூட் புகைப்படங்கள்!

கடல் கடந்த காதல்! தமிழனை கரம்பிடித்த ஸ்வீடன் நாட்டு இளம்பெண்! வைரலாகும் கியூட் புகைப்படங்கள்!


tamil-youngboy-married-swedon-girl

திருச்செங்கோடு சாணார் பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சண்முகவேல் . இவரது மனைவி தமிழரசி. இவர்களுக்கு தரணி என்ற மகள் , பட்டப்படிப்பை முடித்துவிட்டு சுவீடனில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். அங்கு காதல், மொழி, மதம், நாடு ஆகியவை இல்லை என்பது போல அவருக்கும் சுவீடன் நாட்டின் மரினா சூசேன் என்பருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இவர்களுக்கு தரணி என்ற மகன் உள்ளார். அவர் பட்டப்படிப்பை முடித்துவிட்டு ஸ்வீடன் நாட்டில் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மரீனா  சூசேன் என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது.

 அதை தொடர்ந்து தனது காதல் விவகாரம் குறித்து தரணி பெற்றோர்களிடம் கூற, அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் சாணார்பாளையத்தில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கும் தமிழக இளைஞருக்கும் கோலாகலமான திருமணம் நடைபெற்றது.

swedon girl

 மேலும் நாடு, மொழி, மதம் ஆகியவற்றை கடந்த காதல் கல்யாணம் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது. அப்பொழுது மணமக்கள் இருவரும் தாலி கட்டிக் கொள்ளாமல் மாலைமாற்றி, செயின் மாற்றிக்கொண்டனர்.

மேலும் இந்த திருமண விழாவில் இருவீட்டாரின் உறவினர்கள், கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

swedon girl