#BREAKING : நடிகர் விஜய் மீது போலிஸில் புகார்.. வாக்குச்சாவடியில் அத்துமீறல்.?!
ஆசிரியருக்கு விரட்டி விரட்டி லவ் டார்ச்சர் கொடுத்த மாணவன், ஆடிபோன ஆசிரியை எடுத்த அதிரடி முடிவு .!
ஆசிரியருக்கு விரட்டி விரட்டி லவ் டார்ச்சர் கொடுத்த மாணவன், ஆடிபோன ஆசிரியை எடுத்த அதிரடி முடிவு .!
வேலூரில் மள்ளி மாணவன் ஒருவன் தனது ஆசிரியைக்கு லவ் டார்ச்சர் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் கல்லப்பாடியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.அதில் மாலா என்பவர் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
இந்நிலையில் அதே பள்ளியில் ரஞ்சித் என்ற மாணவன் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறான்.அந்த மாணவன் ஆசிரியை மாலாவை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளான்..
இந்த தகவல் ஆசிரியைக்கு தெரிய வந்துள்ளது. உடனே ஆசிரியை மாலா அந்த மாணவனை அழைத்து ,இது தவறு, இப்படியெல்லாம் செய்யக்கூடாது,முதலில் நீ உன் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுரை கூறியுள்ளார்.
ஆனாலும் அதனை கேட்காமல் திருந்தாத ரஞ்சித் மீண்டும் மீண்டும் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் ஒரே நாளில் ஆசிரியையின் செல்போனுக்கு 160 லவ் மெசேஜ்களை அனுப்பியுள்ளான்.
இதனால் பதற்றமடைந்த ஆசிரியை மாலா, இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் தெரிவித்துளளார். மேலும் இதுகுறித்து போலீஸாரிடமும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து போலீஸார் மாணவன் ரஞ்சித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.