மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள்..!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள்..!



Sexual harrasment in Tambaram Bus stand

தாம்பரம் பஸ் நிறுத்தம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 20 வயதுடைய பெண் ஒருவர் அப்பகுதியில் சுற்று திரிந்து வருவார். இந்த நிலையில் இன்று அதிகாலை தாம்பரம் பேருந்து நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்பொழுது அங்கு வந்த இரண்டு இளைஞர்கள் மனநல பாதிக்கப்பட்ட பெண்ணை வாயை மூடி தூக்கிச் சென்று, இருட்டான பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.

பின்னர் இதனை பார்த்த பொதுமக்கள் ஒன்று கூடி இருவரையும் பிடித்து காவல்துறையிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். அந்த விசாரணையில் 27 வயதுடைய வீரமணி மற்றும் 26 வயதுடைய மணிகண்டன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் அவர்களிடமிருந்து ஒரு பட்டாகத்தியும் பறிமுதல் செய்துள்ளனர். ஏற்கனவே இவர்கள் இருவர் மீதும் ஜெயின் பறிப்பு மற்றும் திருட்டு போன்ற 18க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. பலமுறை சிறைக்கும் சென்று வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.