ஆண்களின் ஆபாச வீடியோவை போலீசுக்கே அனுப்பிய ஆசிரியர்! அதிர்ந்து போன போலீசார்!
ஆண்களின் ஆபாச வீடியோவை போலீசுக்கே அனுப்பிய ஆசிரியர்! அதிர்ந்து போன போலீசார்!
ராமநாதபுரம் மாவட்ட குறை தீர்க்கும் பிரிவு செல்போன் எண்ணிற்கு கடந்த ஜூன் 17 -ம் தேதி, சில போட்டோக்கள், சில வீடியோக்கள் வந்துள்ளன. அப்பிரிவில் பணியாற்றிவரும் முதல்நிலைக்காவலர் கண்ணன் என்பவர் அந்த போட்டோக்களை பார்த்ததும் அதிர்ச்சியடைந்துள்ளார். ஆண்கள் சிலர் நிர்வாணமாக இருப்பது, பாலியல் உறவு கொள்வது ஆகிய வீடியோக்கள் அந்த எண்ணிலிருந்து வந்திருந்தது. இதையடுத்து அந்த படங்களை அனுப்பியவர் யார் என்ற விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.
சைபர் க்ரைம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த செல்போன் எண் கோவையை சேர்ந்த பிரேம் கிரண் என்பவரது பெயரில் இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து கோவை சென்ற தனிப்படை போலீசார், பிரேம் கிரணை ராமநாதபுரத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், 29 வயதான பிரேம் கிரண், ஒரு பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றுவதுடன் சொந்தமாக டியூசன் சென்டரும் நடத்தி வருகிறார். இவர் நண்பர்களுக்கு அனுப்புவதற்கு பதிலாக, தவறுதலாக ராமநாதபுரம் குறைதீர்க்கும் எண்ணிற்கு ஆபாசப்படங்களை அனுப்பியதாக பிரேம் கிரண் ஓப்புக்கொண்டதாக போலீசார் கூறியுள்ளனர்.
பிரேம் கிரணிடம், அவரது நண்பர்களில் ஒருவர், ராமநாதபுரம் மாவட்ட போலீசாரின் வாட்ஸ் அப் எண்ணைக்கொடுத்து சிக்கவைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள ராமநாதபுரம் மாவட்ட போலிஸ். அதன் பின் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.