தாயின் தவறான சகவாசத்தால் சீரழிக்கப்பட்ட 16 வயது சிறுமி.. நெஞ்சை உலுக்கும் பரிதாபம்.. அத்தையை கட்டியணைத்து குமுறிய சிறுமி.!

தாயின் தவறான சகவாசத்தால் சீரழிக்கப்பட்ட 16 வயது சிறுமி.. நெஞ்சை உலுக்கும் பரிதாபம்.. அத்தையை கட்டியணைத்து குமுறிய சிறுமி.!



salem-16-aged-minor-girl-abused-by-mothers-affair-man

சேலம் மாவட்டம் தாதாகாபட்டி வேலு புதுத்தெருவில் வசித்து வந்த 16 வயது சிறுமி, கோயம்புத்தூரில் இருக்கும் அத்தையின் வீட்டில் தங்கியிருந்தவாறு பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். மேலும், அங்குள்ள மில்லில் பகுதி நேரமாகவும் பணியாற்றி வருகிறார். நேற்று சிறுமியை அத்தை சேலத்திற்கு அழைத்து வந்துள்ளார். 

அவரின் வீட்டிற்கு சென்று, இனி தாயுடன் தங்கியிருந்து படி என்று கூறவே, அவர் நான் அம்மாவுடன் இருக்க மாட்டேன் என அடம்பிடித்துள்ளார். இதனால் விபரீதத்தை புரிந்துகொண்ட சிறுமியின் அத்தை, சிறுமியிடம் விசாரித்தபோது பகீர் தகவல் வெளியானது. 

அதாவது, தந்தை 8 வருடத்திற்கு முன்னர் இறந்துவிட்ட நிலையில், தாய்க்கு மணிமாறன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்த நிலையில், அவ்வாறாக ஒருநாளில் 2 வருடத்திற்கு முன்னதாக காமுகன் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளான். 

மேலும், தாயும் கள்ளகாதலனுக்கு ஆதரவாக செயல்பட்ட காரணத்தால், அதனை சாதகமாக்கி மிரட்டியும் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளான். இதனால் என்னை தாயிடம் ஒப்படைக்க வேண்டாம் என கதறி இருக்கிறார். இதனைக்கேட்டு அதிர்ந்துபோன சிறுமியின் அத்தை, சேலம் நகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிறுமியுடைய தாயின் கள்ளக்காதலன் மணிமாறனை (வயது 31) கைது செய்து போக்ஸோவில் சிறையில் அடைத்துள்ளனர். சிறுமியின் தாயிடம் விசாரணை நடந்து வருகிறது.