Accident: நின்ற லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து; 3 பேர் பரிதாப பலி..!  

Accident: நின்ற லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து; 3 பேர் பரிதாப பலி..!  



Ranipet Walaja Car Lorry Accident

 

சக்கரம் பழுதாகி நின்ற லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாகினர்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா, குடிமல்லூர் சென்னை - வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் மேம்பாலத்தில் லாரி சக்கரம் பழுதாகி நின்றுள்ளது.

அப்போது, அதே சாலையில் பயணித்த கார் ஒன்று, லாரியின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளனர். 

விபத்து குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை காவல் துறையினர், பலியானோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணை நடந்து வருகிறது.