12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எதிரொலி: அடுத்தடுத்து 2 மாணவிகள் தூக்கிட்டு தற்கொலை.!



HSC 12th Exam results Girl Students SUicide 

 

மே 06ம் தேதியான நேற்று 12ம் வகுப்பு மாணவர்களான அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இதன் வாயிலாக மாணவர்கள் அடுத்தடுத்து தங்களின் எதிர்காலத்தை நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளனர். 

இராமநாதபுரம் மாணவி தற்கொலை: 

இந்நிலையில், இராமநாதபுரம் அரசுப்பள்ளி மாணவி சௌமியா, தான் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

விருத்தாசலத்தில் சோகம்:

அதேபோல, கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்த அபிநயா, கணித பாடத்தில் தோல்வியுற்ற காரணத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் அவரின் பெற்றோர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.