மகள்களை சீரழிக்க வந்த கயவனை கொன்று, மரத்தில் தொங்கவிட்ட தாய்; பதறவைக்கும் சம்பவம்.!



Chhattisgarh Mother Killed Daughters Molester and Hang tree

 

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிரதாப்பூர் பகுதியில் வசித்து வரும் பெண்மணி பாக்மான் கர்வாலா (வயது 52). இவரின் சகோதரர் கஹிரு (வயது 50). 

பாக்மானின் கணவர் இறந்துவிட்ட காரணத்தால், பெண்மணி தனது 2 பதின்ம வயது மகள்களுடன் வசித்து வருகிறார். இருவருக்கும் 14 மற்றும் 16 வயது ஆகிறது. இவர்களின் வீட்டருகே பாக்மானின் சகோதரர் குடியிருக்கிறார். 

அக்கம்-பக்கத்து தகராறில் சிறுமிகளிடம் அத்துமீற முயற்சி:

இருவரும் வசித்து வரும் வீட்டருகே இருக்கும் சஞ்சய்க்கும் - கணவரின் இன்றி வசித்து வந்த பெண்ணுக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று இரவில் பெண்ணின் வீட்டிற்குள் சஞ்சய் அத்துமீறி நுழைந்துள்ளார். 

அங்கு அவரின் 2 மகள்களில் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர், சிறுமியை மீட்டனர். மேலும், சஞ்சயை சரமாரியாக அடித்து நொறுக்கினர்.

பாசத்தால் படுகொலை செய்து கொலை வழக்கில் சிக்கிய குடும்பம்: 

இந்த சம்பவத்தில் சஞ்சய் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட, அவரின் உடலை மரத்தில் கட்டி தொங்கவிட்டுள்ளனர். பின்னர் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சஞ்சயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்ட பெண்மணி, அவரின் சகோதரர், பெண்மணியின் 2 மகள்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.