இந்த நேரத்தில் டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால்.. தமிழக அரசுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை!

இந்த நேரத்தில் டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால்.. தமிழக அரசுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை!



rajinikanth alerts tn goverment not to open tasmac

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் 40 நாட்களுக்கும் மேலாக நாடு முழுவதும் மதுபான கடைகளும் மூடப்பட்டன. ஆனால் கடந்த வாரம் முதல் சில மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

தமிழகத்திலும் கடந்த மே 7 ஆம் தேதி முதல் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

rajinikanth

இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க அனுமதி கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதற்கு தமிழகத்தை சேந்த பல கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினிகாந்த் தமிழக அரசினை எச்சரிக்கும் விதமாக டிவீட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் "இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.