கேப்டன் மகனின் படத்திற்கு வந்த சிக்கல்.! தள்ளிப்போன ரிலீஸ் தேதி.! என்ன காரணம்??
சென்னை உட்பட 7 மாவட்டங்களில் மழை இருக்கு...! வானிலை ஆய்வு மையம் தகவல்!

கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெய்துவந்த வடகிழக்கு பருவமழை அடுத்த 48 மணி நேரத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், காற்றில் ஏற்பட்டுள்ள வேக மாறுபாடு காரணமாக இன்று 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த பட்டியலில் சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், கடலூர், நாகை, விழுப்புரம் மற்றும் அரியலூர் ஆகிய ஏழு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அதிகபட்சமாக வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியஸ் பதிவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.