தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கவிருக்கும் கனமழை.! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா.?

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கவிருக்கும் கனமழை.! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா.?



rain in tamilnadu

வெப்பசலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. கள்ளக்குறிச்சி, செஞ்சி, கடலூர், நாமக்கல், விழுப்புரம், தூத்துக்குடி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல் சென்னை, மதுரை, திருவள்ளூர், விழுப்புரம், சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களின் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

சென்னையில் எழும்பூர், சென்ட்ரல், புரசைவாக்கம், பெரம்பூர், ஆவடி வில்லிவாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் அதிகாலையிலும் பெய்து வந்த மழையால் அலுவலகத்திற்கு செல்பவர்கள் மழையில் நனைந்து கொண்டே செல்லத் தொடங்கினர்.

rainஇந்தநிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ஈரோடு, சேலம் ஆகிய 11 மாவட்டங்களில் மேலும் 2 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.