தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வெளுத்துவாங்கவிருக்கும் மழை! வானிலை மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வெளுத்துவாங்கவிருக்கும் மழை! வானிலை மையம் அறிவிப்பு!


rain in tamilnadu

தமிழகத்தில் தென் மேற்குப் பருவமழைக் காலம் நிலவி வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தினமும் மழை பெய்து வருகிறது. வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. 

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கப் பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக கோவை, நீலகிரி ,தேனி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

rain

சென்னையைப் பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என தெரிவித்துள்ளது. காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், திருச்சி மற்றும் மதுரை ஆகியமாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியசை ஒட்டி பதிவாக கூடும் என்றும் தெரிவித்துள்ளது.