சென்னையில் இன்று அதிகாலையில் பெய்த மழை! வாகன ஓட்டிகள் சிரமம்!

சென்னையில் இன்று அதிகாலையில் பெய்த மழை! வாகன ஓட்டிகள் சிரமம்!



rain in chennai


சென்னையில், இன்று காலை சில இடங்களில் திடீரென மழை பெய்துள்ளது. இதனால் அதிகாலையில் அலுவலகத்திற்கு செல்வோர்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. தென்மேற்கு அரபிக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாகவும், புயலாகவும் மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

rain

இதனையடுத்து தமிழகத்தில் பெய்த கனமழையால் ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் திருவாரூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.

இந்தநிலையில் சென்னையில், இன்று காலை சில இடங்களில் திடீரென மழை பெய்துள்ளது.  சென்னையில் மேடவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், ஆதம்பாக்கம்,எழும்பூர் மற்றும் புரசைவாக்கம் போன்ற இடங்களில் மழை பெய்தது. இதனால் அதிகாலையில் அலுவலகத்திற்கு செல்வோர்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது.