வயல் நடவு பணியில் ஆனந்தமா ஒரு ஆட்டம்.. வைரலாகும் விவசாயிகளின் அசத்தல் வீடியோ.!
வயல் நடவு பணியில் ஆனந்தமா ஒரு ஆட்டம்.. வைரலாகும் விவசாயிகளின் அசத்தல் வீடியோ.!
வயல் நடவு பணியில் விவசாயிகள் ஆடிப்பாடி மகிழ்ச்சியுடன் நாற்று நடும் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மலையூர் கிராம விவசாயிகள் வயலில் நாற்று நடும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். அப்போது வேலையின் பழு தெரியாமல் இருப்பதற்கு ஆடிப்பாடி மகிழ்ச்சியாக வேலை செய்யும் காட்சி பார்ப்போரை மெய் சிலிர்க்க வைக்கிறது.
எவ்ளோ அழகா இருக்கு 🥳வயல் நடவு பணியில் ஆனந்தமா ஒரு ஆட்டம் விவசாயிகள் 🥰🥰🥰அவங்க எவ்ளோ சந்தோஷ்மா இருக்கறது பாக்க நமக்கு ஒரு மனசுல ஒரு சந்தோஷ்ம் 🥳🥳இந்த மகிழ்ச்சி எப்போதும் இவங்களுக்கு கிடைக்கனும்
— ᗰᖇ.ᗯᕼITE🤍 (@RajeshOyite) October 25, 2020
இடம் : ஆலங்குடி ( புதுக்கோட்டை)#Master @actorvijay pic.twitter.com/axhG9H8Pua
இக்காட்சியை ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த இணையவாசிகள் பலரும் இந்த மகிழ்ச்சி எப்போதும் இவர்களுக்கு கிடைக்க வேண்டும் என பாராட்டி வருகின்றனர்.