இப்படி ஒரு மரணம் யாருக்கும் வர கூடாது!! பரோட்டா சாப்பிட்ட 5 மாத கர்ப்பிணி பெண் பரிதாப பலி..

இப்படி ஒரு மரணம் யாருக்கும் வர கூடாது!! பரோட்டா சாப்பிட்ட 5 மாத கர்ப்பிணி பெண் பரிதாப பலி..



pregnant-women-dead-after-eating-parotta

பரோட்டா சாப்பிட்ட 5 மாத கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அடுத்துள்ள வதுவார்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் அனந்தாயி(26). 5 மாத கர்ப்பிணியான இவரது வயிற்றில் இரட்டை குழந்தைகள் வளர்ந்துவர்வதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பரோட்டா சாப்பிட ஆசைப்பட்ட அனந்தாயி, அருகில் இருந்த சாலையோர உணவகம் ஒன்றில் பரோட்டா வாங்கி சாப்பிட்டுள்ளார். பரோட்டா சாப்பிட சிறிது நேரத்தில் அவருக்கு கடுமையான வயிறுவலி வரவே, உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அனந்தாயி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவரது வயிற்றில் இருந்த இரண்டு குழந்தைகளும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவமானது அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.