அட பாவி மனுஷா.. 38 மாதங்களாக மாற்றுத்திறனாளிக்கு வரவேண்டிய உதவித்தொகையை ஆட்டையை போட்ட நபர்.!



Police have arrested a man who allegedly swindled a disabled person's allowance

 


மாற்றுத்திறனாளிக்கு உதவித்தொகை வழங்கியதில் மோசடி மோசடி செய்த நபரை போலீசார் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை போரூர் பகுதியை சேர்ந்த 39 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளியான சரவணன் என்பவருக்கு தமிழக அரசு சார்பில் மாதம் தோறும் ரூ.ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் உதவித்தொகை வழங்கும் ஏஜெண்டாக பணியாற்றி வந்த நபர் அந்த பணத்தை மோசடி செய்ததாக சரவணன் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில், போரூரில் உள்ள வங்கியில் முதியோர் மற்றும் ஊனமுற்றோருக்கு உதவித்தொகை வழங்கும் ஏஜெண்டாக பணியாற்றி வரும் கோவூரை சேர்ந்த ரமேஷ்ஆனந்த் என்ற நபர் அரசு சார்பில் எனக்கு வழங்கிய உதவித்தொகை எனக்கு வரவில்லை என்று கூறி ஏமாற்றி, 38 மாதங்களாக ஏமாற்றியுள்ளார். மேலும் எனக்கு வந்த உதவித்தொகையை அவரே எடுத்து மோசடி செய்து விட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

isabled person's

சரவணன் அளித்த புகாரின் பேரில் போலீசார் ரமேஷ் ஆனந்தை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், சரவணனுக்கு தெரியாமலேயே அவரது வங்கி கணக்கில் இருந்து மாதம் ரூ. ஆயிரம் வீதம் 38 மாதங்களாக வந்த உதவித்தொகை ரூ.38 ஆயிரத்தை எடுத்து மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து ரமேஷ் ஆனந்தை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் இதுபோல் வேறு யாரிடம் எல்லாம் மோசடி செய்துள்ளாரா என தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.