குடித்துவிட்டு வந்த போலீஸ் ஏட்டு.! தற்கொலை நாடகமாடிய மனைவி.! பயத்தில் போலீஸ் ஏட்டு எடுத்த விபரீத முடிவு.!

குடித்துவிட்டு வந்த போலீஸ் ஏட்டு.! தற்கொலை நாடகமாடிய மனைவி.! பயத்தில் போலீஸ் ஏட்டு எடுத்த விபரீத முடிவு.!


police-commit-suicide

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கோகுல் நகரை சேர்ந்தவர் ரத்தினகிரி. 51 வயது நிரம்பிய இவர், சின்னாளப்பட்டி காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நாகஜோதி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். நாகஜோதி அரசு பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

ரத்தினகிரி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்வதாக கூறப்படுகிறது. இதனால் நீங்கள் இவ்வாறு மது குடித்துவிட்டு வந்தால் நாங்கள் தற்கொலை செய்துகொள்வோம் என நாக ஜோதி கூறியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ரத்தினகிரி மதுபோதையில் வந்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த நாகஜோதி நாங்கள் தற்கொலை செய்துகொள்கிறோம் என கூறி அறைக்குள் சென்று கதவை சாத்தியுள்ளனர். இதனையடுத்து ரத்தினகிரி வீட்டின் ஒரு அறையில் தூங்க சென்றுள்ளார். பின்னர் அவர் காலை 2 மணி அளவில் மீண்டும் மனைவியின் அறைக்கதவை தட்டியுள்ளார். ஆனால் அவர்கள் ரத்தினகிரி மீண்டு சண்டை போடா தான் கதவை தட்டுகிறார் என நினைத்து கதவை திறக்காமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. 

suicideஆனால் தனது மனைவி உண்மையாலுமே தற்கொலை செய்துகொண்டார் என பயந்து தனது அறைக்கு சென்று தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. காலையில் வெகுநேரமாகியும் ரத்தினகிரியின் அறைக்கதவு திறக்கப்படாமல் இருந்தது. கதவை தட்டியபோதும் அவர் திறக்கவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரத்தினகிரி தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்தினகிரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்