மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் சீண்டல், தட்டி கேட்ட கணவர்.! படுகொலையில் முடிந்த கொடூரம்.!!

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் சீண்டல், தட்டி கேட்ட கணவர்.! படுகொலையில் முடிந்த கொடூரம்.!!



physically-challenged-woman-sexually-abused-husband-who

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வாய் பேச முடியாத மனைவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் குறித்து புகார் தெரிவித்ததால் கணவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தனிப்படை அமைத்து கொலையாளியை தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுதூர் பகுதியில் உள்ள முதலியார்பட்டி தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. 45 வயதான இவருக்கு திருமணமாகி மனைவியும் 1 மகளும் உள்ளனர். மாரி முத்துவின் மனைவி வாய் பேச முடியாதவர் என்று தெரிகிறது. மாரிமுத்து விருதுநகரில் உள்ள வழக்கறிஞர் ஒருவரிடம் குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்தார்.

tamilnaduஇந்த சூழலில் வினோத் என்ற 30 வயது இளைஞர் மாரிமுத்துவின் வாய் பேச முடியாத மனைவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாரிமுத்து காவல்துறையில் புகார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வினோத்தை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது .

tamilnaduஇந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று மாரிமுத்து தனது வீட்டிலிருந்து கைகாட்டி கோவில் பஜாருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் மறைந்திருந்த வினோத் தான் வைத்திருந்த கத்தியால் மாரிமுத்துவை கொடூரமாக குத்தி இருக்கிறார். இதில் குடல் சரிந்து கீழே விழுந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தக் கொலை சம்பவத்தையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த மாரிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து தப்பி ஓடிய வினோத்தை தீவிரமாக தேடி வருகிறது.