திடீரென அதிகரித்த பெட்ரோல் டீசல் விலை.! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்.!

திடீரென அதிகரித்த பெட்ரோல் டீசல் விலை.! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்.!


petrol price increased

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக கடும் நிதிச்சுமை ஏற்பட்ட  நிலையில், பெட்ரோல் விலை உயர்ந்துகொண்டிருந்த நிலையில் ஒரு மாதமாக பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் விற்கப்பட்டு வந்தது.

petrol

இந்த நிலையில், கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு  இன்று 19 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.85.31-க்கும், டீசல் விலை 28 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.77.84-க்கும் விற்பனையாகிறது.