வாகன ஓட்டிகளுக்கு ஷாக் செய்தி..! வரலாற்றில் இல்லாத அளவு உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை..!

வாகன ஓட்டிகளுக்கு ஷாக் செய்தி..! வரலாற்றில் இல்லாத அளவு உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை..!



petrol diesel price increased

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப,  இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றம் செய்து வருகின்றன. அந்த வகையில் 137 நாட்களாக ஒரே விலையில் நீடித்து வந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த  மாதம் 22-ம் தேதியில் இருந்து நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 109 ரூபாய் 34 காசுகளுக்கும், டீசல் 99 ரூபாய் 42 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து 110 ரூபாய் 9 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 100 ரூபாய் 18 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டுகிறது.

பெட்ரோலை தொடர்ந்து டீசல் விலையும் லிட்டர் 100 ரூபாயை கடந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.